மயிலாடுதுறை, செப்.25- மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏ.வி.சி கல்லூரியின் என்.எஸ்.எஸ் சார்பில் நடந்த என்.எஸ்.எஸ் தின விழா கல்லூரியின் வேலாயுதம் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன் தலைமை வகித்து பேசினர். என்.எஸ்.எஸ் திட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.யமுனா, திட்ட அலுவலர்கள் என்.சரவணன், எஸ்.ஜெயக்குமார், எம்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வணிகவியல் மற்றும் தாவரவியல் துறை பேராசிரியர்கள் ஜி. கார்த்திகேயன், டி.எம் சதீஷ்கண்ணன் ஆகியோர் முதலாமாண்டு என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சியளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் எம்.விஜயலெட்சுமி, எஸ்.சௌந்திரநாயகி, பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.