தரங்கம்பாடி, ஆக.20- நாகை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரி யில் வரலாற்றுத் துறை சார்பில் பழங்கால நாணயங்க ளின் கண்காட்சி செவ்வாயன்று முதல்வர் ஜீன் ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர் சித்ரா கண்காட்சியை துவக்கி வைத்தார். 1600 வருட பழமை யான நாணயங்கள், 200 வருட பழமையான முத்திரை தாள்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 150 மேற்பட்ட நாடுகளின் ரூபாய் நோட்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. கடந்த 35 ஆண்டுக்கும் மேலாக இவற்றை சேகரித்த நாகப்பட்டினத்தை சேர்ந்த சித்திக், 100க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள், அஞ்சல் தலைகள் ஆகியவற்றை சேகரித்த பொறையார் சர்மிளா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வரலாற்றுத்துறை தலைவர் மல்லிகா புண்ணியவதி, துறை பேராசிரியர்கள் ஜூலியஸ் விஜயக்குமார், செல்வராஜ், ஜோசப் அமிர்தராஜ், ஸ்டா லின், ஷீலா எட்வர்ட், அமலா, கிளாரா, சக்திவேல் ஆகி யோர் விளக்கமளித்தனர். கண்காட்சியை மயிலாடுதுறை, பூம்புகார், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாண வர்கள் பார்வையிட்டனர்.