மயிலாடுதுறை: மயிலாடு துறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியின் பொருளாதாரத் துறை சார்பில் அமர்த்தியா சென் மன்ற கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஆர். நாக ராஜன் தலைமை வகித்தார். மயி லாடுதுறை தருமபுரம் ஞானாம் பிகை அரசு மகளிர் கலை கல்லூரி யின் பொருளாதாரத் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் டி. முருகன், அமர்த்தியா சென்னின் பொருளாதார கருத்துக்கள் குறித்து பேசினார். அமர்த்தியா சென் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.செல்வி முன்னிலை வகித்து வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொருளாதார துறைத் தலைவர் ஆர். கார்த்திகேயன் மற்றும் பொருளாதாரத் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர். அமர்த்தியா சென் மன்ற செயலர் மாணவி எம்.நளினி நன்றி கூறினார்.