சீர்காழி, ஆக.27- நாகை மாவட்டம் சீர்காழி அருகே அரசூரில் சிதம்ப ரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பொதுக்குளம் உள்ளது. இந்தக் குளத்தில் வருடந்தோறும் தண்ணீர் தேங்கியே கிடக்கும் கால்நடைகள் குடிப்பதற்கும், பொதுமக்கள் குளிப்பதற்கும், இந்தக் குளத்தின் தண்ணீர் பயன்பட்டு வந்தது. வருடந்தோறும் தண்ணீர் நிரம்பி இருந்து வந்தது இந்தக் குளம். ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து வறண்டு காணப்பட்ட குளத்தில் தற்போது கடந்த இரண்டு தினங்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் பெய்த மழையின் காரணமாக குளத்தில் சுமார் 5 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. தற்பொழுது இந்தக் குளத்தின் தண்ணீரை பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பயன்பாடாக உள்ளது என்றும் இக்குளத்திற்கு தண்ணீர் வந்து செல்லும் வாய்க்காலை முறையாக தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தேவேந்திரன் தெரிவித்தார்.