சீர்காழி, ஜன.19- கொள்ளிடம் அருகே அளக் குடியிலிருந்து காட்டூர் செல்லும் ஆற்றங்கரை சாலையை சூழ்ந் துள்ள சீமைக்கருவேல முட்செடி களை அகற்ற கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்திலி ருந்து காட்டூர் செல்லும் கொள்ளி டம் ஆற்றின் வலது கரை சாலை யின் இருபுறங்களிலும், சீமைகரு வேல முட்செடிகள் அடர்ந்து வள ர்ந்து, சாலையை மூடிக் கொண் டுள்ளது. சாலையை மூடியிருப்ப தால், சாலை ஒத்தையடி பாதை யாக மாறியுள்ளது. இதனால் இந்த வழியாக செல்வோர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். வாகனங்களில் செல்வோர்கள் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி அளக்குடியிலிருந்து காட்டூர் செல்லும் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை முட்செடி களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.