tamilnadu

img

சாலையின் குறுக்கே திடீரென விழுந்த மரம்

சீர்காழி, அக்.21-  காப்பியக்குடியில் சாலையின் குறுக்கே விழுந்த மரம், அதிகாரிகள் நடவ டிக்கையால் அகற்றப்பட்டது. நாகை மாவட்டம் கொள்ளி டம் அருகே காப்பியக்குடி கிராமத்திலிருந்து மத்தல முடையான் கிராமத்திற்குச் செல்லும் சாலையின் ஓரம் பெரிய ஒதிய மரம் இருந்தது. கடந்த சில தினங்களாக அவ் வப்பொழுது மழை மற்றும் காற்றும் வீசி வருகிறது.  இந்நிலையில் காற்றுடன் மிதமான மழை பெய்த போதுசாலை ஓரத்திலிருந்த ஒதிய மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இது குறித்து கிராமப் பொதுமக்கள் சார்பில் கொடுத்த தகவலின் பேரில்  கொள் ளிடம் பி.டி.ஓ ஜான்சன் அறிவுறுத்தலின் பேரில் ஊராட்சி செய லாளர் வெற்றிவேந்தன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.