tamilnadu

img

பெரியாரியல் பயிற்சி முகாம்

சீர்காழி, ஜூன் 11- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமத்தில் மயி லாடுதுறை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகா முக்கு மாவட்டத் தலைவர் குணசேக ரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தளபதி ராஜ் வரவேற்றார். மண்டலத் தலைவர் ஜெகதீசன், திரு வாரூர் மாவட்டத் தலைவர் மோகன், மாவட்ட அமைப்பாளர் சாமிநாதன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலை வர் ஞானவள்ளுவன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் ஓர் அறிமுகம் மற்றும் பெரி யார் போற்றிய பெண்ணியம், சாதி ஒழிப்புப் போராட்டம், சுயமரியாதை இயக்கம், சமூகநீதி உள்ளிட்ட தலைப்பு கள் குறித்து திராவிடர் கழக மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன், மாநில செயலாளர் துரை சந்திரசேகரன், முனைவர் அன்பழ கன், எழுத்தாளர் ஓவியா ஆகியோர் பேசினர். மயிலாடுதுறை எம்.பி ராம லிங்கம் சிறப்புரையாற்றினார். முகா மில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற் றும் தி.க நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். கடவாசல் செல்வம் நன்றி கூறினார்.