கடமலைக்குண்டு,மே 20- தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த வர் தமிழரசன்(23). இவருக்கும் கோம் பைத்தொழு கிராமத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரி என்பவருக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றுள்ளது. இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு மாதமாக இவர்கள் கோம்பைத்தொழுவில் பாண்டீஸ்வரியின் பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் தமிழ ரசனுக்கும் அவரது மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. திங்களன்று மது போதையில் இருந்து தமிழரசன் மனைவி பாண்டீஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். கோபத்தில் வீட்டை வெளியேறிய தமிழரசன் மஞ்ச னூத்து சோதனைச் சாவடி அருகே வனப்பகுதிக்குள் சென்று மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மயிலாடும்பாறை காவல்துறையினர் தமிழரசன் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.