tamilnadu

img

தொழிலாளர்களை அலைக்கழிக்கும் தொழிலாளர் நலவாரியம்

தேனி, மே 13- தேனி மாவட்டத்தில் தொழி லாளர் நல வாரிய உறுப்பினர் கள் நிவாரண தொகை பெறு வதற்காக முறையான அறிவிப்பு இல்லாமல் அலைக்கழிப்பு செய் யப்படுவதால் தொழிலாளர்கள் அவதிக்கு ஆளாகி கொரோனா பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 35 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள், தொழிலாளர் நல வாரி யத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். கட்டுமானம், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட பல் வேறு தொழில்களை செய்யும் தொழிலாளர்கள் 17 வகையான தொழிலாளர் நல வாரியங்களின் கீழ் உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டுள்ளனர். தற்போது கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்ட நிலையில் தொழிலாளர் களுக்கு ரூ.1000 வீதம் இரண்டு மாதங்களுக்கு ரூ.2000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த ஏற்பாடு செய் யப்பட்டது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் 12 ஆயிரம் தொழி லாளர்களின் வங்கிக் கணக்குகள் நலவாரிய அலுவலகத்தில் இணைக்கவில்லை எனக் கூறி சில தினங்களுக்கு முன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைய தளத்தில் வங்கிக் கணக்கு விப ரம் கொடுக்காதவர்களின் பட்டி யல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தங்கள் வங்கி கணக்கு விபரங்களை தொழிலா ளர் நலவாரிய இமெயில் முக வரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்ததன் அடிப்படையில் தொழிலாளர்களும் தற்போது வங்கி கணக்கு விபரங்களை அனுப்பி வருகின்றனர். இந்நிலை யில் தற்போது அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கி அதன் விபரத்தை அனுப்ப வேண் டும் என நலவாரிய அலுவல கத்தில் தெரிவித்ததாக கூறி நூற் றுக்கணக்கானோர் தேனி மாவட் டத்தின் பல்வேறு அஞ்சலகங்க ளில் கூட்டமாக கூடி வருகின்ற னர்.

இதனால் சமூக விலகல் கடை பிடிக்காத நிலை ஏற்பட்டுள்ளது டன், கொரோனா பரவும் ஆபத் தும் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் நலவாரியம் முறையான அறி விப்பு வெளியிடாமல் தொழிலா ளர்களை அலைக்கழிப்பு செய்து வருவதால் தொழிலாளர்கள் குழப்பமும், அவதியும் அடைந்து வருகின்றனர். தொழிலாளர் நல வாரியம் முறையான அறிவிப்பு வெளி யிட்டால் தொழிலாளர்கள் குழப் பத்திற்கு தீர்வு ஏற்படுவதுடன் அஞ்சலகங்களுக்கு தேவை யில்லாமல் வருபவர்கள் எண் ணிக்கை குறையும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.