tamilnadu

img

தேக்கடி தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

தேனி, ஆக.12-  தேக்கடி  தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் தேக்கடியில்  அரசு மற்றும் தனி யார் ஓட்டல்கள், விடுதிகள் உள்ளன. தேக்கடி நுழைவுப் பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த மே மாதம் திரு வனந்தபுரம் ஆழூரைச் சேர்ந்த பிரமோத் பிரகாசன்(40), அவரது மனைவி தமிழ்நாடு காஞ்சிபுரம் சப்தகிரி நகரைச் சேர்ந்த ஜீவா(30), பிரமோத்தின் தாயார் சோபனா வந்து தங்கினர். அவர்கள் தமிழகப்பகுதியில் விவ சாய நிலம் விலைக்கு வாங்க வந்திருப்பதாக விடுதி உரி மையாளரிடம் தெரிவித்துள்ள னர். இந்நிலையில், ஞாயிறன்று  மதியம் விடுதி உரிமையாளர் அனீஷ் விடுதி அறைகளை பார்வையிட்டு வரும்போது பிரமோத்பிரகாஷ் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. அழைத்தும் யாரும் கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது, இரண்டு பேர் தூக்கில் தொங்கி கிடப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அனீஷ் குமுளி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். குமுளி காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், சார்பு ஆய்வாளர் பிரசாந்த் நாயர் தலைமையில் காவல்துறையினர்  விடுதி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரமோத்பிரகாஷ் மற்றும் அவரது தாயார் சோபனா தூக்கில் தொங்கி  இறந்த நிலையிலும்,  ஜீவா கட்டிலில் இறந்த நிலையில் கிடப்பதும் தெரிந்தது. காவல்துறையினர்  அந்த அறையையும், அவர்கள் பயன்படுத்தி வந்த இரண்டு கார்களையும் சோதனை செய்தனர்.  இதைத்தொடர்ந்து மாலையில் சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் பகுப்பாய்வு நிபுணர்கள் அறையை சோதனை செய்தனர். அதை யடுத்து இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு பரிசோத னைக்காக கோட்டயம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.