tamilnadu

கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்கக் கூடாது முழு ஊரடங்கு என்று சொன்னால் குற்றமாம் தேனி ஆட்சியர் பேட்டி குழப்பத்தில் மக்கள்

தேனி, ஜூலை 9- தேனி மாவட்டத்தில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் கடைகள், வர்த்தக நிறு வனங்களை அடைக்க தன்னிச்சையாக அறி விப்பு செய்துள்ள நிலையில் ஊரடங்கு எனச் சொன்னால் குற்றம் என தேனி மாவட்ட ஆட்சி யர் தெரிவித்ததால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் போடி, தேனி, கம்பத் தில் மக்கள் வியாழனன்று கடைகளில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் ஜூலை 15-ஆ ஆம் தேதி வரை இரண்டாம் முறையாக கட்டுப்பாடுகளை நீடித்து மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத் தரவிட்டார். தேனி, போடி ,கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று பரவலை தடுக்க வணி கர் சங்க நிர்வாகிகளை அழைத்து, வரு வாய்த்துறை, உள்ளாட்சி துறை மற்றும் காவல்துறையினர் அழைத்து ஆலோசனை நடத்தினர். அப்போது முழு ஊரடங்கு அமுல்படுத்தபடுவதாகவும், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி யது. இதற்கு பொதுமக்கள், பல்வேறு தரப்பி னர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கம் போல் காலை 6 மணி முதல் 2 மணி வரை கடைகள் திறக்கப்படும் என வியாபாரி சங்கத்தினர் அறிவித்தனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் பெரும் குழப்பம் நிலவியது. தேனி மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்தும், கடைகள், வர்த்தக நிறு வனங்கள் செயல்படும் நேரம் மற்றும் தடை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழு மையான அறிவிப்பு வெளியிடவில்லை.
தன்னிச்சையாக அறிவிப்பு
போடி நகராட்சி, தேனி நகரட்சிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை கடைகள், அணைத்து வர்த்தக நிறு வனங்கள் இயங்க தடை விதிப்பதாக அறி வித்துள்ளனர். இதனால் வியாழன் காலை முதல் மளிகைக் கடைகள் , பெட்ரோல் நிலை யங்களில் மக்கள் திரண்டனர். இது விழாக் காலங்களைப் போல் இருந்தது.

ஒருங்கிணைப்பு இல்லை
புதன் கிழமை நடைபெற்ற செய்தியா ளர் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சி யர் தேனி மாவட்டத்தில் கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளில், மருந்தகம், மருத்துவ மனைகள், ஏடிஎம் இயந்திரம் மட்டுமே செயல்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களில் கட்டுப்பாடு மட்டும் விதிக்கப்படும். இதை முழு ஊரடங்கு என சொல்லக் கூடாது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட தடை விதிப்பது குறித்து சில நிமிடங்களில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். எனி னும் வியாழக்கிழமை மாலை வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எவ்வித அறிவிப்பும் வரவில்லை. மாவட்டதில் துறை ரீதியாக ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்குக் கார ணம். இதனால் உள்ளாட்சி அமைப்புகள் தனித்தனியாக பொது முடக்கத்தை அறி வித்து மக்களை குழப்பி வருகிறார்கள். உள்ளாட்சி சார்பில் ஆட்டோ மூலம் அறிவிக்கப்படும் கொரோனா அறிவிப்பு மக்களை பீதியடைய செய்துள்ளது.