தேனி, மே 11- போடி நகராட்சி புதூரில் தாலுகா காவல் நிலையம் செல்லும் சாலையில் நியாய விலைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நியாய விலைக் கடை யின் எதிரே தனியார் பள்ளி ஒன்று உள் ளது. பள்ளியின் வெளியே சில மூடைகள் கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து போடி வட்டாட்சியர் மணிமாறன் அங்கு சென்று பார்த்துள்ளார். மூடைகளை பிரித்து பார்த்தபோது அதில் நியாய விலைக் கடையில் வழங் கப்படும் விலையில்லா கோதுமை என்பது தெரிந்தது. கோதுமை மூடைகளை யார் அங்கு போட்டது என்பது தெரிய வில்லை. 50 கிலோ எடை கொண்ட மூன்று மூடை கோதுமைகளை பறிமுதல் செய்த வட்டாட்சியர் அதனை போடியில் உள்ள அரசு தானிய கிடங்குக்கு அனுப்பி வைத் தார். கோதுமை மூடைகளை அங்கு போட் டது யார், நியாய விலைக் கடை ஊழி யர்களே கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக அங்கு போட்டு வைத்தார் களா என்பது குறித்து வருவாய்த்துறை யினர் விசாரித்து வருகின்றனர்.