பெரியகுளத்தில் வீட்டில் வெடி தயாரித்த போது எதிர்பாராத விதமான வெடி வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டில் வெடி தயாரித்த போது எதிர்பாராத விதமாக வெடித்தது. இந்த விபத்தில் தாய் பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது மகள் நிவேதா தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.