தேனி, ஜூலை 15- கொரோனா தடுப்பு பணி களில் ஈடுபட்டுள்ள ஊழியர் களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும் ,பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளை கவனத்தில் கொள்ளாமல் இதர திட்ட பணி களை விரைந்த முடிக்க நிர்பந்திப் பதை கைவிட வேண்டும். முன் னாள் மாநில தலைவர் மு.சுப்பிர மணி மீதான ஒழுங்கு நடவ டிக்கை குறித்து உயர்நீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் உள்ள அணைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி, சின்னமனூர், பெரிய குளம், கம்பம், பாளையம், போடி, க.மயிலாடும்பாறை ,ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் சர வணன், மாவட்ட செயலாளர் ரவிச் சந்திரன், மாவட்ட இணைச்செய லாளர் அன்னலட்மி, துணைத் தலைவர்கள் ஞான.திருப்பதி, ரவிச்சந்திரன், ஜெகதீஸ் சந்திர போஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். மதுரை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மதுரை கிழக்கு மேற்கு யூனியன் அலு வலகத்தில் புதனன்று நடைபெற் றது. சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் அ.பாலாஜி விளக்கி பேசினார். வணிக பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ் வரன் ஆதரித்து பேசினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் உலகநாதன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.