tamilnadu

இரு குழந்தைகள் உட்பட 3 பேருக்கு கொரோனா தோற்று

 தேனி, மே 16- தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட் டத்திற்கு மும்பையில் இருந்து 19 பேர் வெள்ளிக்கிழமை ஒரு வேனில் வந்தனர். இவர்களுக்கு தேவதானப்பட்டி அருகே காட்ரோடு சோதனைச்சாவடியில் பரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வருஷநாடு அருகே உள்ள மஞ்சனூத்து பகுதியைவ் சேர்ந்த வாலி பருக்கு கொரோனா இருப்பது உறுதியா னது. இவர் மும்பையில் தனியார் நிறு வனத்தில் வேலை செய்து வந்தார். இவர் தேனி அரசு மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். சின்னமனூர் அருகே முத்துலாபுரத் தில் எட்டு வயதுப் பெண் குழந்தைக்கும், ஏழு வயது ஆண் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமரர் ஊர்தி ஓட்டு நராக பணிபுரிந்து முத்துலாபுரம் வந்த நபர் மூலம் தொற்று பரவியுள்ளது. ஏற்க னவே இவரது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

;