கடமலைக்குண்டு, ஜூன் 16- தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே மந்திச்சுனை கிராமத்தை சேர்ந்தவர் மகாராஜன் (49). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த மகாராஜன் ஞாயிறன்று மதுபாத்தில் விஷம் கலந்து குடித்துள்ளார். அவரது உறவினர்கள் அவரை சிகிச் சைக்காக க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மகாராஜன் உயிரிழந்தார். இது தொடர்பாக கடமலைக்குண்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.