tamilnadu

img

போடியில் 15 டன் ரேசன் அரிசி, மாவு பறிமுதல்....

தேனி:
போடியில் தனியார் அரிசி அரவை ஆலையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 15 டன் ரேஷன் அரிசி, அரிசி மாவு மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

போடிநாயக்கனூர் நகர் பகுதியிலிருந்து  கேரளாவிற்கு மினி லாரிகள், இருசக்கர வாகனங்கள், சரக்கு லாரிகள் மூலமாக ரேஷன் அரிசி,மாவு மூடைகள் தொடர்ந்து கடத்தி வருவதாக  புகார் எழுந்தது. இதையடுத்து போடி புதூர் பகுதியில் உள்ளதனியார் அரசி அரவை ஆலையில்  ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கால்நடைகளுக் குத் தீவனமாக விற்பனை செய்வதாக போடிகாவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபனுக்கு  தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் போடி நகர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஆலையில் சோதனை நடத்தினர் அப்போது 15 மூடை ரேசன் அரிசி மூடை மாவும், அரைப்பதற்காக தயாராக இருந்த 4ஆயிரம் கிலோ அரிசி மூட்டைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உத்தமபாளையம் உணவுத்தடுப்பு காவல் ஆய்வாள உதயசந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 15 மூடை ரேசன் அரிசி மூடைமாவும், அரைப்பதற்காக தயாராக இருந்த 4 ஆயிரம் கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக புதூரைச் சேர்ந்த அப்தாகிர் மகன் பீர் ஒளி (51), மற்றும் சின்னமனூரை சேர்ந்த போத்திராஜ் (45), ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். கடத்தலுக்குப் பயன்படுத் திய மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்புத் துறை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.