tamilnadu

img

ஐதராபாத் தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 5 மாத குழந்தை பலி

ஐதராபாத் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 மாத பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியாகி உள்ளது. 

ஐதராபாத்தில் உள்ள ஷைன் குழந்தைகள் நல மருத்துவமனையின் 3 ஆவது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில், இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த பிரிவில் சிகிச்சைக்காக 6 பச்சிளம் குழந்தைகள்  இன்குபேட்டர்களில் வைக்கப்பட்டிருந்தன. இந்த விபத்தில், ஒரு 5 மாத பச்சிளம் குழந்தை பலியாகி உள்ளது. மற்ற 5 குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. இன்குபேட்டரில் ஏற்பட்ட மின்கசிவால், இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 

;