தூத்துக்குடி, ஆக.25- தூத்துக்குடியில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணை யம் நடத் தும் 2019ம் ஆண்டு ஒருங்கிணைந்த 2ம் நிலை காவலர் களுக்கானஎழுத்து தேர்வு தூத்துக்குடி நகரத்தில் 8 மையங்களில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 9,599 பேருக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டிருந்தது. தேர்வினை 8,065 பேர் எழுதினர். 1534 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். மில்லர்புரம் பிஎம்சி பள்ளி மையத்தில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் பார்வையிட்டார். உதவி கண்காணிப்பாளர்கள் பொன் ராமு, குமார் மற்றும் டிஎஸ்பி பிரகாஷ் மற்றும் இன்ஸ் பெக்டர்கள் 8 மையங்களில் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர்.