தூத்துக்குடி, ஆக.12- ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி யானைகளை பாதுகாக்க உலக யானை கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பருவ நிலை மாற்றம், கடும் வறட்சி போன்ற கார ணங்களால் உணவு, தண்ணீர் தேடி வனங்களை விட்டு யானைகள் வெளி யேறுகின்றன. அவ்வாறு வரும் பொழுது ரயில்வே தண்டவாளங்களை கடப்பது, மின் வேலியில் சிக்குவது போன்ற கார ணங்களால் இறக்கின்றன. 2015 ஆண்டின் ஆய்வின்படி இந்தியாவில் 32 ஆயிரம் யானைகளும், தமிழகத்தில் 3750 யானை களும் இருந்ததாக தகவல் உள்ளது. உலக அளவில் 22 வகையான யானைகள் அழிந் துள்ளன. இந்நிலையில், கோவில்பட்டி சிந்தா மணி நகரில் பாரதியார் நினைவு அறக்கட் டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாண வர்கள் தங்களது இல்லங்களின் முன்பு யானை முகக்கவசம் அணிந்து யானை இனங்களை பாதுகாக்கவும், யானை களுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்டவை வலி யுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பாரதியார் நினைவு அறக்கட்டளை நிர்வாகி கள் முத்து முருகன் உள்ளிட்டோர் கலந்து கெண்டனர்.