tamilnadu

பைக் விபத்தில் மனைவி சாவு  கணவர் உட்பட 3 பேர் படுகாயம்

 தூத்துக்குடி, ஜன.16- தூத்துக்குடி அருகே மோட்டார் பைக் விபத்தில் மனைவி பலி யானார். அவரது கணவர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு கிராமத்தை சேர்ந்த வர் பாஸ்கர். இவரது மனைவி விமலேஸ்வரி (38). இவர்களுக்கு நந்தினி (10), தீனதயாளன் (4) என்ற இரு குழந்தைகள் உள்ள னர். புதன் மாலை உமரிக்காட்டிலிருந்து தூத்துக்குடிக்கு ஒரே பைக்கில் 4 பேரும் வந்தனர். தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு அகரம் பாலம் பகுதியில் வந்த போது பின்னால் வந்த ஒரு வாக னம் இவர்களது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்ட தாக தெரிகிறது. இதில் கீழே விழுந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். விமலேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மற்ற 3 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஏரல் இன்ஸ்பெக்டர் பட்டாணி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு விபத்து
தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தியை சேர்ந்தவர் மாடசாமி மகன் விருது அழகன் (32). லாரி டிரைவர். புதன்இ ரவு இவர் எட்டயபுரம் மெயின் ரோட்டில் கார் ஓட்டி சென்றார். அப்போது திடீரென சென்டர் மீடியனில் கார் மோதியதில் அவர் பரிதாப மாக உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் கலா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

;