புதுதில்லி, ஆக. 6 - தில்லியில் உள்ள கல்லூரிகளில் சேருவதற்காக தமிழக மாணவர்கள் ஓ.பி.சி சான்றிதழ் கொடுக்கின்றனர். அந்தச் சான்றிதழில் அவர்களின் பெயருக்கு முன்பாக திரு அல்லது செல்வி என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இந்த வார்த்தைகளால் தில்லி கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.