tamilnadu

img

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்!

தூத்துக்குடி,அக்டோபர்.21-  விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 265 விசைப்படகுகளுடன் தமிழ்நாடு மீனவர்கள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினமும் காலை 5 மணி முதல் 9 மணி வரை மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் கேரள விசைப்படகு மீனவர்களைத் தடுக்க தமிழக அரசு மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அனைத்துப்படகுகளும் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.