தூத்துக்குடி, ஜூன் 9- தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் குருராஜா (48), ஜெயராஜ் ரோட்டில் பழக்கடை நடத்தி வரு கிறார். திங்கள் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது 3பேர் அவரை கத்தி யைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து குருராஜா அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி முனியசாமி புரத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் வினோத்குமார் (23), நந்தகோபாலபுரத்தைச் சேர்ந்த ராமசுப்பி ரமணியன் மகன் கணேசன் (21), கே.வி.கே., நகரைச் சேர்ந்த கணேசன் மகன் அருள்முத்து மணி (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
துறைமுக ஊழியரிடம் வழிப்பறி
தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டைச் சேர்ந்தவர் தயாளன் மகன் சதீஷ் (37), தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் கிளார்க்காக வேலைபார்த்து வருகிறார். திங்கள் இரவு வேலைமுடிந்து தனது பைக்கில் ஜார்ஜ் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2பேர் அவரை வழிமறித்து கத்தி யைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி, தூத்துக்குடி காமராஜ் நகரைச் சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்கு மார் (26), சிவந்தாகுளம் ரோட்டைச் சேர்ந்த சுரேஷ் மகன் தீபன்ராஜா (20) ஆகிய 2பேரை கைது செய்தனர். தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் சோலையப்பன் கூலித் தொழிலாளி. இவர் திங்கள்இரவு வேலைமுடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது 2பேர் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ள னர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, தூத்துக்குடி சத்யா நகரைச் சேர்ந்த சதாசிவம் மகன் பாரதி குமார் (23), செல்சினி காலனியைச் சேர்ந்த மணி மகன் சுதாகர் (19) ஆகிய இருவரை யும் கைது செய்தனர். மேற்கண்ட சம்பவங்க ளில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடிகளான 7 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவை யில் உள்ளதாக கூறப்படுகிறது.