tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கற்பனையானதாம்: முதல்வர்!

சென்னை, ஜூலை 20- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், வாகனம் மீது ஏறி நின்று காவலர்கள் சுட்டதாக கூறு வது கற்பனையானது என்று முதல மைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். சட்டப்பேரவையில் வெள்ளி யன்று (ஜூலை 19) காவல், தீய ணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மீதான மானியக் கோரிக்கை விவா தம் நடைபெற்றது. இந்த விவா தத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சி சட்டமன்றக்குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி, “தூத்துக்குடியில் கூட்டத்தை கலைக்க காவல்துறை துப்பாக்கி சூடு நடத்திய போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பின்பற்றவில்லை. வண்டி மீது ஏறி  நின்று சுட்டார்கள் என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனி சாமி, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு  குறித்து விசாரிக்க தனி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையும் நடைபெற்று வரு கிறது. மேலே ஏறி நின்று சுட்டார் கள், கீழே இருந்து சுட்டார்கள் என்ப தெல்லாம் கற்பனையானது. மேலே  இருந்து சுட்டார்களா என்பது விசார ணையில் தெரியவரும்” என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய ராமசாமி, விசாரணைக்குழு அறிக்  கையை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட தும் அனைத்து உறுப்பினர்களுக் கும் வழங்க வேண்டும். குமரியில் காவலர்களால் பொதுமக்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தியதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து  செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தினார்.