tamilnadu

img

தூத்துக்குடி: சரக்கு கப்பலில் பிலிப்பைன்ஸ் நாட்டு மாலுமி தற்கொலை!

தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கப்பலில் பிலிப்பைன்ஸ் நாட்டு மாலுமி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலக்கரி ஏற்றி வந்த எம் வி ஸ்டார் லூரா என்ற கப்பல் கடந்த 17 ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகம் வந்தது. துறைமுகத்தில் பெர்த் கிடைக்காததால் துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது.இந்த கப்பலில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மாலுமி சினம்பன் கிம் ஜோரன் என்பவர் கப்பலிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தகவல் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு நேற்று இரவு அளிக்கப்பட்ட து. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த மாலுமியின் சடலத்தைக் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப் பதிவு செய்து மாலுமி உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.