தூத்துக்குடி துறைமுக காலிப் பணியிடம்
தூத்துக்குடி, ஆக.25- தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் காலியாக உள்ள எக்ஸிக்யூட்டிவ் இன்ஜி னியர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. மொத்த பணியிடங்கள்: 6, பணியின் தன்மை: Executive Engineer, ஊதியம்: ரூ.20,600- ரூ.46,500, கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங், விண்ணப் பிக்க கடைசித் தேதி: 03.10.2020. மேலும் விவரங்களுக்கு வ.உ.சி துறைமுக இணையதளத்தில் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
காவலரை கொன்ற நபருக்கு ஆதரவாக முகநூல் பகிர்வு: ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்
தூத்துக்குடி, ஆக.25- தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே வனப் பகுதியில் கடந்த 18-ம் தேதி கொலை வழக்கில் தொடர்புடைய துரைமுத்து என்பவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் சென்ற போது, அவர் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு களை போலீஸ் நோக்கி வீசி எறிந்தார். அதில் காவலர் சுப்பிரமணியம் மீது வெடி குண்டு விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் குண்டுகளை எறிந்தபோது கைகளில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் துரைமுத்துவும் இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை யினர் வழக்குபதிவு செய்து துரைமுத்து வின் சகோதரர்கள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனி டையே காவலர் சுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப் பட்டது. துரைமுத்துவின் உடலை உற வினர், நண்பர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று பெரிய அளவிலான அரிவாள் ஒன்றையும் துரைமுத்துவின் உடலுடன் சேர்த்து புதைத்தனர். அதை வீடியோ வாக எடுத்து வெளியிட்டனர். இந்த சம்பவம் குறித்து சர்ச்சை கிளம்பிய நிலையில், துரைமுத்துவின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வெள்ளப் பாண்டி என்பவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அதனை நெல்லை ஆயு தப்படை காவலரான சுடலைமுத்து என்ப வர், தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள் ளார். இந்த தகவல் காவல்துறை வட்டா ரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சக காவலரை கொன்ற நபரின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்த காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலை யில் காவலர் சுடலைமுத்துவை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகர ஆணையர் தீபக் டாமோர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை
தூத்துக்குடி,ஆக.25- தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறு வதாக மத்தியபாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததது. இதையடுத்து இன்ஸ் பெக்டர் ராஜாமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, பாளை ரோட்டில் உள்ள மில் அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த எப்போதும்வென்றான் அருகேயுள்ள சோழாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் பாலமுருகன் (22) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.12ஆயிரத்து 700 பணத்தை பறி முதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.