தூத்துக்குடி, மே 29-தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்ற தொழிற்சங்க தேர்தலில் சிஐடியு, முதன்மை தொழிற்சங்கமாக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் துறைமுக தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் மே 29புதனன்று தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நடைபெற்றது. இத்தேர்த லில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் தொழிற்சங்கங்கள், துறை முக சபை போர்டில் தொழிலாளர் டிரஸ்டி ஆகும் வாய்ப்பை பெறுவார்கள்.இந்நிலையில் நடைபெற்ற தேர்தலை மத்திய தொழிலாளர் துணைத் தலைமை ஆணையர் முத்து மாணிக்கம் தலைமையிலான தேர்தல் அலுவலர்கள் நடத்தினர். இத்தேர்தலில் போர்ட் மெரைனர்ஸ் அண்ட்ஜெனரல் ஸ்டாப் யூனியன் (எச்எம்எஸ்), போர்ட் எம்ப்ளாயீஸ் டிரேடு யூனியன் (ஐஎன்டியுசி), துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் (சிஐடியு), போர்ட் யுனைடெட் ஜெனரல்ஒர்க்கர்ஸ் யூனியன்(எச்எம்எஸ்), நேஷனல் ஹார்பர் ஒர்க்கர்ஸ் யூனியன்(ஐஎன்டியுசி), போர்ட் அண்ணா டாக் அண்ட் டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் ஆகிய ஆறுசங்கங்கள் போட்டியிட்டன. இறுதியில் அண்ணா டாக் தொழிற்சங்கம் போட்டியிலிருந்து விலகிக்கொண்டது.
காலை 6 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 649வாக்குகளில் 637 வாக்குகள் பதி வாகின. வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு தொடங்கி 6.00 மணிக்கு முடிவுகள் வெளியாகின. தேர்தலில் துறை முக ஜனநாயக ஊழியர் சங்கம் (சிஐடியு) 183 வாக்குகள் பெற்று முதன்மை சங்கமாக தேர்வு பெற்றது. இரண்டாம் இடம் பிடித்த போர்ட் எம்பிளாயீஸ் டிரேடு யூனியன் (ஐஎன் டியுசி) 117 வாக்குகள் பெற்றது. போர்ட் மெரைனர்ஸ் அண்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் (ஹெச்எம்எஸ்) 115 வாக்கு களும், நேசனல் ஹார்பர் ஒர்க்கர்ஸ் யூனியன் (ஐஎன்டியுசி) 114 வாக்கு களும், போர்ட் யுனைடெட் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் 105 வாக்குகளும் பெற்றன.
மத்திய அரசின் கடும் தாக்குதலுக்கு எதிராக துறைமுகங்களை பொதுத்துறைகளாக பாதுகாக்க தொடர்ச்சி யாகப் போராடிவரும் துறைமுக ஜன நாயக ஊழியர் சங்கம் சிஐடியுவை முதன்மை சங்கமாக தேர்வு செய்த துறைமுக தொழிலாளர்களுக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.பேச்சிமுத்து, மாவட்டச்செயலாளர் ஆர்.ரசல் ஆகியோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் கே.எஸ்.அர்ச்சுணன், மாநகர செயலாளர் தா.ராஜா, புறநகர் செயலாளர் ராஜா ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனர்.இந்த மாபெரும் வெற்றியைக் கொடுத்த துறைமுக தொழிலாளர் களுக்கு துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் கே.காசி, துணைப்பொதுச் செயலாளர்கள் ஈஸ்வர மூர்த்தி, ராஜகுமார், பொருளாளர் மீனாட்சி சுந்தரேசன் ஆகியோர் நன்றியை தெரிவித்துக் கொண்டதுடன் துறைமுகத்தை பாதுகாக்கும் போராட்டத்தை வீரியமாக முன்னெடுத்து செல்லவிருப்பதாக தெரிவித்தனர். தேர்தல் வெற்றியை துறைமுக ஊழியர்கள் பட்டாசு வெடித்து துறைமுக ஊழியர் குடியிருப்பில் இருசக்கர வாகனத்தில்பேரணியாக சென்று தொழிலாளர் களுக்கு நன்றி தெரிவித்தனர்.