tamilnadu

img

தட்டார்மடம் வாலிபர் கொலை வழக்கு... காவல் ஆய்வாளர், அதிமுக நிர்வாகி மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு

தூத்துக்குடி:
தட்டார்மடம் வாலிபர்  கொலைவழக்கில் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக நிர்வாகி உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப்பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பை சேர்ந்த செல்வன் (வயது 32) என்பவர் செப்டம்பர்17 ஆம் தேதி  காரில் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை தொடர்பாக தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக வர்த்தக அணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் திருமணவேல் ஆகியோர் உள்பட சிலர் மீது நெல்லை மாவட்டம்திசையன்விளை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருமணவேல் உள்பட 2 பேர்சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி போலீஸ் டிஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார். திசையன்விளை காவல் நிலையத்தில் கொலை வழக்கு தொடர் பான ஆவணங்கள் தயார் செய் யப்பட்டு வருகின்றன.இந்த ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டன.  இந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துள்ளது. அதில், திருமணவேல், ஆய்வாளர் ஹரிகிருஷ் ணன் உள்பட 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது.

;