tamilnadu

தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கல்

 பொள்ளாச்சி, ஜூலை 12- வால்பாறை நகராட்சியில் பணி புரிகின்ற  தூய்மை பணியாளர்களுக்கு  நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வால்பாறையில் கொரோனா தடுப்பு நடவ டிக்கையாக தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகா மிற்கு ஆரம்பம் சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபு லட்சுமணன் தலைமை வகித்தார். இதனையடுத்து நக ராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது.

;