இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 10 பேருக்கு ரூ.3.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் இருந்து 2 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் கல்பிட்டி மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் புத்தளம் மாவட்ட கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வாரியாபொல
இதுகுறித்த விசாரணை, கல்பிட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஒரு படகில் சென்ற 12 மீனவர்களுக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து கடந்த 3-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
மற்றொரு படகில் சென்ற 10 மீனவர்கள் மீதான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மற்றொரு படகில் சென்ற 10 மீனவர்களுக்கு ரூ.35 லட்சம் அபராதம் விதித்தும் செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த 10 மீனவர்களும் நீதிமன்ற வளாகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
தற்போது சிறையில் உள்ள 22 மீனவர்களையும் விரைந்து மீட்குமாறு தருவைகுளம் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனையில் பாராமுகமாக உள்ள மோடி அரசாங்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், இலங்கை அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வருகிற 20-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.