tamilnadu

உப்பு தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய பேச்சுவார்த்தை தேதியில் மாற்றம்

தூத்துக்குடி, மே 26- உப்பு தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதி யம் தொடர்பான பேச்சு வார்த்தை ஜூன் 3 ஆம்  தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.  கடந்த 18.05.2020 அன்று உப்பு உற்பத்தியாளர் சங்க த்தில் நடைபெற்ற பேச்சு வார்தையில் உப்பு உற்பத் தியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வா கிகள் கலந்து கொண்ட னர். இதில் அரசு சார்பில்  அறிவித்துள்ள குறைந்த பட்ச ஊதியம் ரூ.440-க்கு  பதிலாக ஆண் தொழிலா ளிக்கு ரூ.405, பெண் தொழி லாளிக்கு ரூ.395 என அரசு ஆணைக்கு புறம்பாக  ஒப்பந்தம் கையெழுத்தா னது. இதில் சிஐடியு நிர்வா கிகள் கையெழுத்திடவில்லை. அதனை தொடர்ந்து சிஐடியு சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப் பட்டது.

தூத்துக்குடி உப்பள தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க கோரி உப்பு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் அரசை வலியுறுத்தி கடந்த  மே 22 ஆம் தேதி முதல் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்த னர். பின்னர் தூத்துக்குடி  தாசில்தார் - காவல்துறையி னர் உண்ணாவிரதம் நடை பெற்ற இடத்திற்கு வந்து உப்பு சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழை தனர். ஆனால் உப்பள உற்பத்தி யாளர் சங்கம் சார்பில் யாரும் கலந்து கொள்ளாத கார ணத்தினால் உப்பள தொழி லாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் வெகு நேரமாக காத்திருந்தனர். பின்னர் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாத உப்பு  உற்பத்தியாளர் சங்க நிர்வா கிகளுக்கு பேச்சுவார்த்தை தொடர்பாக அழைப்பு (சம்மன்) அனுப்பப்பட்டது. அதன்படி மே 26 அன்று தொழிலாளர் துறை ஆணை யர் அலுவலகத்தில் ஆணை யர் காளிதாஸ் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது.

இதில் உப்பு உற்பத் தியாளர் சங்கம் சார்பில் தனபாலன், சந்திரமேனன், திலீப், ஸ்ரீகாந்த், உப்பு தொ ழிலாளர் சங்க (சிஐடியு) சார்பில் மாவட்டத் தலைவர்  கே.பொன்ராஜ், செயல்  தலைவர் எம்.ராமசாமி,  செயலாளர் கே.சங்கரன், பொ ருளாளர் கே.மணவாளன் மற்றும் நிர்வாகிகள் பாஸ்கர், லிங்கம்மாள், முனியசாமி, கிருஷ்ணாம்மாள், சுப்பையா, ஏஐடியுசி சார்பில் பரமசிவம், கொம் பையா, ஐஎன்டியுசி சார்பில் ராஜு, அதிமுக சங்கம் சார்பில் குருசாமி, உப்பு தொழிலாளர் ஐக்கிய சங்க நிர்வாகி பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை யில், கடந்த மே மாதம் 18  ஆம் தேதி உப்பு உற்பத்தியா ளர் சங்கத்தில் வைத்து போட ப்பட்ட ஒப்பந்தம் செல்லுபடி யாகாது என்று தொழிலாளர் துறை ஆணையர் அறி வித்தார். குறைந்தபட்ச ஊதி யம் தொடர்பான பேச்சு வார்த்தை வருகிற ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் என அறி வித்தார். இதன் காரணமாக உப்பு தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற காலவரையற்ற வேலைநிறுத்த போராட் டம் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது.