tamilnadu

img

ஜெயராஜ் - பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினம்...

தூத்துக்குடி:
சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  செவ்வாயன்று  அவர்களது  உருவப் படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த ஆண்டு காவல் துறையினர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி சிறையில் அடைத்தனர். கோவில்பட்டி சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியஇந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். மேலும், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களது  உருவ படத்திற்கு மாசிலாமணி புரத்தில்உள்ள சிபிஎம்  மாவட்ட குழு அலுவலகத்தில்மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் தலைமையில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பேச்சிமுத்து, ராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் குமாரவேல், மூத்த தோழர் லெட்சுமிநாதன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;