தூத்துக்குடி:
ஜப்பானைச் சேர்ந்த ஜே.வி.சி என்ற நிறுவனம் கடந்த 2010 இல் மும்பை டிஆர்டிஓ அலுவலகத்தில் ஒரு இரிடியம் கண்டெய்னர் பெட்டியை ஆர்டர்செய்துள்ளது. மும்பைடிஆர்டிஓ அலுவலகத்திலிருந்து ஜப்பானுக்கு அனுப்பிய இரிடியம் பெட்டிகள் காணாமல் போயுள்ளன. இதில் ஒரு கண்டெய்னர் பெட்டியில் ஆறு இரிடியம் குழாய்கள் இருந்துள்ளன. இது தொடர்பாக மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மும்பையில் கடத்தப்பட்ட 6 இரிடியம் தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியபுரம் லாட்ஜில் பதுக்கி வைத்திருப்பதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜெயகுமாருக்கு கிடைத்த தகவலின் பேரில்சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சிப்காட் சப்இன்ஸ்பெக்டர் சங்கர், தட்டப்பாறை தனிப்பிரிவு காவலர் விக்னேஷ், சிப்காட் தனிப்பிரிவு காவலர் கலைவாணர் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்கு இரிடியம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் 6 டியூப்களில்இருந்த 144 மில்லி கிராம் இரிடியத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (45), சிவகங்கைமாவட்டம், காரைக்குடி கண்டனூர் காசி அம்பலம் தெருவைச் சேர்ந்த வைத்திலிங்கம் (60, தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்த முருகன் (47), தூத்துக்குடி ராஜபாளையம் ஆரோக்கியபுரம் வடக்குத் தெருவை சேர்ந்த மரியதாஸ் (49), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக இரிடியத்தை விற்பனை செய்து தருவதற்காக முத்தையாபுரம் தோப்பு தெரு செல்வராஜ் மகன் தங்கம் (55) என்பவரை 4 பேரும் நாடி உள்ளனர்.
இதுகுறித்து தங்கம் கொடுத்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.