tamilnadu

img

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு.. தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., பேட்டி

தூத்துக்குடி:
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆணவக் கொலைகள் அதிகரித்து விட்டன என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக கனிமொழி எம்பி சனியன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்புகளை தெரிவித்த போதும் முக்கியமான மசோதாக்கள் அனைத்தும் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப் படாமல் நிறைவேற்றப்படுவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தங்களுக்குள்ள அதிக உறுப்பினர் பலத்தை வைத்து இதுபோன்ற அனைத்து காரியங்களையும் சாதித்து விடலாம் என்பது சரியல்ல. தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன்.விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி க்கு வரும். அதன் பின்னர் தமிழகத்தினுடைய குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆணவக் கொலைகள் அதிகரித்து விட்டன. தொடர்ந்து தமிழர்கள் பல பேர் பலஇன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.இவற்றையெல்லாம் பார்க்கின்ற போதுதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகத் தெரியவில்லை என்றார்.

;