tamilnadu

img

தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கம்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டது.  தெர்மோ ஸ்கேனர் மூலம் பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை முதல் மாவட்டத்துக்குள் பேருந்துகளை தமிழக அரசு இயக்கஅனுமதி அளித்தது. இதன்படி மாவட்டத்துக்குள் சுமார் 90 பஸ்களை இயக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி-திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், சாத்தான்குளம், கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தான்குளம் உள்ளிட்ட வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதேபோன்று நகர்ப்புறங்களில் டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன. பஸ்கள் வழக்கம் போல் காலை 5 மணி முதல் இயக்கப்படுகிறது.

;