tamilnadu

img

கோவில்பட்டியில் காய்கறி மார்க்கெட் இடமாற்றம்

தூத்துக்குடி,  ஜூன் 7- கோவில்பட்டியில் வ.உ.சி. அரசு மேல்நி லைப் பள்ளி மற்றும் ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி  வளாகத்தில் செயல் பட்டு வந்த இரு  தற்காலிக தினசரி சந்தைகள் காந்தி மை தானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்பட்டியில் நகராட்சி தினசரி சந்தை மூடப்பட்டது. இதனால் அங்கிருந்த காய்கறி கடைகள் கூடுதல் பஸ் நிலையம், வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, ஏ.வி. மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டன. அங்கு பொதுமக்கள் காய்கறி கள் வாங்கி வந்தனர். இந்நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15 ஆம்  தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதனால்  வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, ஏ.வி. மேல்நிலைப்பள்ளிகளிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதையடுத்து அங்கு செயல்பட்டு வந்த காய்கறி கடைகளை செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ள காந்தி மைதானத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.  அதன்படி மொத்தம் 64 கடைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. தற்போது காந்தி மைதானம் தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக மாறி உள்ளது. தினமும் காலை 7 மணி முதல் மாலை 5  மணி வரை கடைகள் செயல்படும் என்று நகர சபை ஆணையாளர் ராஜாராம் தெரிவித்தார்.

;