தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறை விசாரணைக் கைதியான தூத்துக்குடியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்திக்கு திடீ ரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவரை சிறை காவ லர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குஅழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த பின்பு மீண்டும் சிறைக்குதட்சிணா மூர்த்தி அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் சாத்தான்குளம் வியாபாரி களான ஜெயராஜ்,பென்னிக்ஸ் இறப்பு குறித்து கோவில்பட்டி கிளைச் சிறையில் சிபிஐவிசாரணை நடத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலை யில் விசாரணைக் கைதி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.