என்ஐஏ சந்தேக வளையத்தில் அனில் நம்பியார்
திருவனந்தபுரம், ஜூலை 17- ஆர்எஸ்எஸ்-இன் தொலைக் காட்சியான ஜனம் டிவி ஒருங்கிணை ப்பு செய்தி ஆசிரியர் அனில் நம்பியா ரின் தலையீடு தான் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க வழிவகுத்தது என்று கூறப் படுகிறது. ஜூலை 5 ஆம் தேதி திரு வனந்தபுரத்தில் இருந்து காணாமல் போன சொப்னா மற்றும் சந்தீப் நாயர் ஆகியோருடன் அனில் நம்பியார் தொலைபேசியில் தொடர்பு கொண்ட விவரம் வெளியானது. என்ஐஏ இந்த உரையாடல்களை சேகரித்துள்ளது. அனில் நம்பியார் மத்திய அமைச்சர் கள் வி.முரளீதரன் பாஜக மாநில தலை வர் கே.சுரேந்திரன் மற்றும் கர்நாடகா வின் பாஜக உயர்மட்ட தலைவர்களு டன் நெருக்கமாக தொடர்புடையவர். இந்து ஐக்யா வேதி தலைவருக் குச் சொந்தமான வர்கலாவுக்கு அருகி லுள்ள ரிசார்ட்டில் இரண்டு நாட்கள் தங்கிய பின்னர் சொப்னாவும் சந்தீப் பும் பெங்களூருக்கு புறப்பட்டனர். பாஜக தலைவர்களின் தலையீட்டைத் தொடர்ந்து இந்த மறைவிடம் அவர்க ளுக்கு கிடைத்துள்ளது. ஜூலை 5 மதியம் 12.42 மணியளவில், ஸ்வப்னா வுக்கும் அனில் நம்பியாருக்கும் இடை யிலான உரையாடல் 262 வினாடிகள் நீடித்தது. அந்த நேரத்தில் சரக்கு வளாகத்தில் ராஜீய பார்சல்கள் பரி சோதனை நடந்து கொண்டிருந்தது. அதற்கு முந்தைய நாள் சந்தீப் நாயர், அனில் நம்பியார், சொப்னா ஆகி யோர் பேசியதற்கான ஆதாரங்களும் உள்ளன.
தங்கக் கடத்தல் பின்னணியில் சொப்னாவும் சந்தீப்பும் இருப்பதை அனில் நம்பியார் ஏற்கனவே அறிந்தி ருந்தார். பார்சல்களைச் சரிபார்க்கும் போது இருவரும் ஒருவருக்கொருவர் பேசியிருப்பது இதற்கு சான்று. ஆனால், செய்திக்காகவே அழைத்த தாக அனில் நம்பியார் கூறுகிறார். ஒருங்கிணைப்பு செய்தி ஆசிரியர்கள் பொதுவாக செய்திகளை நேரடியாக எடுக்க மாட்டார்கள். அது நிருபர்களின் பொறுப்பு. செய்தி எடுக்கப்பட்டாலும், அது முக்கியமானதாக ஒருபோதும் ஜனம் டிவியில் ஒளிபரப்பாகவும் இல்லை. தேசத் துரோக குற்றவாளிகளுடன் ஆர்எஸ்எஸ் சேனல் தலைவரின் தொடர்பு பல சந்தேகங்களை எழுப்பு கிறது. அனில் நம்பியாருக்கு தங்கக் கடத்தலில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து என்ஐஏவும் சுங்கத்துறை யும் விசாரிக்கும்.