தூத்துக்குடி, மே 20-தூத்துக்குடி மாநகராட்சி 52வது வார்டு பொன்னாண்டி நகர் மூன்று மற்றும் நான்காவது தெருவில் நான்காவது திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் கடந்தஇரண்டு மாதமாக குடிநீர் வரவில்லை. உடனடியாக குடிநீர் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி தெற்குமண்டல அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. 52 வது வார்டு கிளை செயலாளர் டி வன்னிய ராஜாதலைமை தாங்கினார்இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர செயலாளர் பா.ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் பி.பூமயில், 54,57 வது வார்டு கிளை செயலாளர்கள், வாலிபர் சங்க உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.