தூத்துக்குடி, ஜூன் 27- தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள னர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 750-ஐ கடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கொ ரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தனி மனித இடை வெளியை கடைபிடிக்காமல் மக்கள் கடைகளில் அதிகளவில் கூட்டமாக நிற்பதாக புகார்கள் வருகின்றன. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளும், தடைகளம் விதிக்க ப்பட்டிருந்த நிலையில், தற்போது தூத்துக்குடியில் மாநக ராட்சி பகுதிகளில் உள்ள டீ கடைகளை மூட வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் திடீர் உத்தரவு பிறப்பித்து ள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதால் கொ ரோனா வைரஸ் பரவும் என்ற அச்சத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒலி ப்பெருக்கி மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு வெளி யிட்டு வருகின்றனர். இதையடுத்து சனிக்கிழமை காலை முக்கிய சாலைகளில் உள்ள டீ கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.