தூத்துக்குடி, மே 25- தூத்துக்குடி-சென்னை இடையே திங்கட்கிழமை தொடங்குவதாக இருந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தமிழ கம் உள்பட கொரோனா பர வலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்ப டுத்தப்பட்டு மே 31 வரை நீட்டி க்கப்பட்டுள்ளது. இதனால் ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. இந்நிலையில், திங்க ளன்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் ஆன்லைனில் விமான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. உள்நாட்டு விமான பயணம் பற்றி தமிழக அரசு வழிகாட்டு நெறி முறைகளையும் வெளி யிட்டது. ஊரடங்கு எதிரொலியாக ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கி யுள்ளது. விமான பயணிக ளுக்கு பரிசோதனைகள், சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. விமான சேவை தொடங்கிய நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கான விமான முன்பதிவும் தொடங்கியது. இதற்காக 38 பயணிகள் விமானத்தில் பய ணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், தூத்துக் குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் திங்க ளன்று காலை ரத்து செய்யப் பட்டது. சென்னையில் அதிக அளவு கொரோனா பாதிப்பு இருப்பதால் விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.