tamilnadu

img

கொரானோ.... தூத்துக்குடியில் 9 பேர்  குணமடைந்து  வீடு திரும்பினர்

தூத்துக்குடி: 
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரானோ தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்த 9 நபர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் .கடம்பூர் செ.ராஜூ , மாவட்ட ஆட்சியர்    சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்துகொண்டு கொரானோ தொற்று நோயினால்  சிகிச்சை பெற்று குணம் அடைந்த 9 நபர்களுக்கு பழங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர் .

;