tamilnadu

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தூத்துக்குடி, மே 20- 2020 ஆம் ஆண்டிற்கான ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ 15.8.2020 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.  இதற்கான தகுதிகள்: 15  வயது முதல் 35 வயது வரை யுள்ள ஆண்/பெண் ஆகி யோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2019 அன்று 15 வயது நிரம்பியவராக இருத் தல் வேண்டும் மற்றும் மார்ச்  31, 2020 அன்று 35 வயதுக் குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2019 ஏப்.1 முதல் மார்ச் 31 வரை) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரி சீலிக்கப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வரு டங்கள் தமிழகத்தில் குடியி ருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக் கப்பட வேண்டும்) விண்ணப்பதாரர்கள் சமு தாய நலனுக்காக தன்னார் வத்துடன் தொண்டாற் றியிருக்க வேண்டும்.

அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய- மாநில அரசுகள், பொதுத்துறை நிறு வனங்கள், பல்கலைக்கழ கங்கள்-கல்லூரிகள்- பள்ளி களில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப் பிக்க இயலாது. விண்ணப் பதாரருக்கு உள்ளூர் மக்களி டம் உள்ள செல்வாக்கு விரு திற்கான பரிசீலனையில் கண க்கில் கொள்ளப்படும். விண்ணப்பங்கள் தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat. tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப் பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம்: 30.6. 2020 மாலை 4 மணி என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

;