தூத்துக்குடி, ஜூன் 17- தூத்துக்குடி அருகே சாலையோர மரங்களை அனுமதியின்றி வெட்டியதாக மின்வாரிய ஊழியர்கள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில், ஆத்தூர் முதல் ஆறுமுகநேரி வரை சாலையின் இருபுறமும் உள்ள 14 மரங்களை நெடுஞ்சாலைத் துறையின் அனுமதியின்றி தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அலு வலக உதவியாளர் குருசாமி, ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போர்மேன்சின்னத்துரை உட்பட மின்வாரிய ஊழியர்கள் 4 பேர் மீது சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.