tamilnadu

img

ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைதான 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி...

தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும்வேறு வழக்கில் கைதாகி மரணமடைந்தவரின் தாய்க்கு ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகை
யை கனிமொழி எம்பி வழங்கினார். 

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு,மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகநடைபெற்ற போராட்டத்தின் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்கு காயங்களும், பலருக்கு மன உளைச்சலும் ஏற்பட்டதைக் கருதிஅவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர்விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில் 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இது தவிர, ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச் சாலையிலேயே இறந்துவிட்டபடியால், வாழ்வாதாரம் இழந்து வாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டுலட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி சனியன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணஉதவியை திமுக மகளிரணிச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி வழங்கினார். இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர்உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்டகாவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

;