தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
டி.கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்., தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சியிலும், தரேஸ் அகமது ஐ.ஏ.எஸ்., ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு உள்ளிட்ட பகுதிகளிலும், ஆல்பி ஜாண் வர்க்கீஸ் ஐ.ஏ.எஸ்., பழையகாயல், முக்காணி, கொற்கை, உமரிகாடு உள்ளிட்ட பகுதிகளிலும், பொன்னையா ஐ.ஏ.எஸ்., ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம் ஆகிய பகுதிகளிலும், தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் ஐ.ஏ.எஸ்., ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சுற்றுவட்டாரப் பகுதியிலும், கிரண்குராலா ஐ.ஏ.எஸ்., குலசேகரநத்தம், அப்பன்திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.