tamilnadu

img

தூத்துக்குடி மாவட்டத்தில் 36 இடங்களில் வெள்ளம் பாதிக்க வாய்ப்பு... முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை...

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் தெரிவித்ததாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல்  ஜனவரி வரையிலான காலத்தில் வடகிழக்கு பருவமழை பொழிவு இருக்கும். தூத்துக்குடி மாவட்டத்திற்கு 60 முதல் 70 சதவீதம் வரை மழைப்பொழிவு வடகிழக்கு பருவமழை மூலம்தான் கிடைக்கப்பெறுகிறது. இந்த பருவமழை காலத்தில் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கினை கையாள்வதற்கு தயார்நிலையில் இருக்க வேண்டும் எனஅறிவுறுத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 36 வெள்ளநீர் பாதிக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரிடர் மீட்பு குழு அலுவலர்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு ஜோனல் டீம்கள் அமைத்து அவற்றை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளபேரிடர் கால முதல்நிலை பொறுப்பாளர்களை சந்தித்து அவர்களுக்கு உரியபயிற்சிகளும் அளித்து உறுதி செய்துஅவர்களை தயார் நிலையில் வைத்துகொள்ள வேண்டும். மேலும், பாதிப்புக்குஉள்ளாகும் பகுதிகளில் உள்ள அனைவரையும் மீட்கவும், பாதுகாப்பு குறித்தானஅனைத்து தகவல்களையும் உடனடியாக அனைத்து துறை அலுவலர்களுக்கும் சென்றடையும் வகையில் தகவல்களை தயார் செய்து வைக்க வேண்டும்.பேரிடர் காலங்களில் பயன்படுத்தக்கூடிய மீட்பு மையங்களில் குடிநீர்வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தயார் நிலையில் வைக்க வேண்டும். மழைக்காலங்களில் மீட்பு மையங்களுக்கு தேவைப்படும் உணவு, குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு தேவையானவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கு மணல் மூட்டைகள், மீட்பு உபகரணங்கள், ஜேசிபி எந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள், கால்வாய்கள் உள்ளிட்டவை தூர்வாரப்பட்டு சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

பொதுப்பணித்துறை, குடிநீர்வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகளை மழை தொடங்குவதற்கு முன்னதாகவே முடிக்க வேண்டும். மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாராக வைக்க வேண்டும். மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய்களை தவிர்ப்பதற்கு மருத்துவ முகாம்களை அமைக்கதேவையான மருத்துவர் மற்றும் மருத்துவபணியாளர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். மேலும் மிகவும் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் அதன் குக்கிராமங்களில் உள்ளகழிவு நீர் ஓடைகளில் மழைநீர் தேங்கி நிற்காத வகையில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக கால்நடைகளை பாதுகாக்க முதல் நிலை பாதுகாவலர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். மேலும் கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழக்கும்போது உரிய வகையில் அப்புறப்படுத்த   முதல் நிலை பாதுகாவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி 
முகமை திட்ட இயக்குர் தனபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), தனப்ரியா (திருச்செந்தூர்), சுகாதார பணிகள் துணை இயக்குநர் அனிதா, வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், உதவி ஆணையர்(கலால்) சுகுமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணி, பேரிடர்வட்டாட்சியர் செல்வபிரசாத் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், பல்வேறுதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.