tamilnadu

img

ஏப்ரல் 30 வரை முன்பதிவு கிடையாது...ஏர் இந்தியா அறிவிப்பு

தில்லி 
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு வரும் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதனால் உள்ளூர் மற்றும் சர்வதேச விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைக்‍கான முன்பதிவை வரும் 30-ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 14-ஆம் தேதியுடன் தேசிய ஊரடங்கு முடிவுக்‍கு வந்தாலும், மேலும் நீட்டிக்‍கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளதால் 30 ஆம் தேதி வரை  முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளதாக ஏர் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப் பின் வரும் முடிவுக்காகக் காத்திருக்கிறோம் எனவும்  தெரிவித்துள்ளது. 
 

;