tamilnadu

மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூலை 27- மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மதுரை மாவட்டத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மேலூரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் வி. அடக்கிவீரணன், ஏ.ராஜேஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலூர் தாலுகா செயலாளர் எம். கண்ணன், சிபிஐ சார்பில் பெரியவர் (சிபிஐ), ராமநாதன் (மதிமுக) உட்பட பலர் கலந்து கொண்டனர். யா.ஒத்தக்கடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்டச் செய லாளர் பா.காளிதாஸ், என்.குமரேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகா செயலாளர் எம்.கலைச்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, மதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.மார்நாடு, காங்கிரஸ் விவசாய அணி நிர்வாகி அய்யாவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமயநல்லூர் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின்  ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந் தம், பி.நாகேந்திரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் வி.உமா மகேஸ்வரன், மாவட்டச் செயலாளர் சொ. பாண்டியன், கண்ணன், ரவிக்குமார் உட்பட பல்வேறு விவசாயிகள் அமைப்பு களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

;